Friday 28 February 2014

HEADAHCE

ஒற்றை தலைவலி

ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.
காரணம்:குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம்.

அறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்

தீர்வுகள்:பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.
1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.

3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.

7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு
(ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறு
இந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.

8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேய்த்து விடலாம்.

செய்ய வேண்டியவை:
1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

2. 2‍-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.

3. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.

4. தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:
1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.
2. வெயிலில் அலைவது.
3. காரமான உணவு வகைகள்.
4. வயிறு முட்ட சாப்பிடுதல்.
5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை

Thursday 27 February 2014

வருவாய் இழப்பு

வருவாய் இழப்பு சேலம் கோட்ட சென்னை வழித்தடப்பேருந்துகளுக்கு

சேலம் மாவட்டத்தின் பல ஊர்களிலிருந்து சென்னைக்கு 50 க்கு மேற்பட்ட பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் மதுராந்தகம்  மற்றும் செங்கல்பட்டு நகர்களுக்குள் சென்று செல்ல சேலம் கோட்ட மேலான்இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.மற்ற கோட்டங்களிலிருந்து இயக்கப்படும் அனத்து சென்னை வழித்தடப்பேருந்துகளும் புறவழிச்சாலையில் இயக்கப்படுகின்றன.விழுப்புரம் நகரிலிருந்து சென்னைக்கு இயங்கும் பேருந்துகள் கூட புறவழிச்சாலையிலேயே இயக்கப்படுகின்றன.
நகருக்குள் சென்று செல்வதனால் பயணநேரம் 30 முதல் 50 நிமிடங்கள் அதிகமாகிறது.இதனால் காலை வேளைகளில் சென்னை,சென்னை புறநகர் பகுதிகளிலிருந்து அலுவலகத்திற்கோ வேலைக்கோ மருவத்தூர் திண்டிவனம்,விழுப்புரம் செல்லும் பயணிகள் சேலம் கோட்டப்பேருந்துக்களை புறக்கணிக்கின்றனர்.இதனால் ஒரு பேருந்துக்கு சுமார் 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகின்றது.மாதம் ஒன்றுக்கு முப்பது முதல் 45 லட்சம் இழப்பு ஏற்படுகிறது.
மேற்படி நகர்களுக்குள் செல்லும் என்ற அறிவிப்பு எதுவும் பேருந்துகளில் இல்லாத்தால் தெரியாமல் ஏறிய பயணிகள் ஓட்டுநர் நடத்துனர்களிடம் வாக்குவாத்ததில் ஈடுபடுதுடன் திட்டவும் செய்கின்றனர்.

தொழிலாளிகளுக்கு விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் அகவிலைப்படி நிலுவைத்தொகை போன்ற நிதி பாக்கிகளை கொடுக்க வக்கில்லாத நிர்வாகம் இது போன்ற இழப்புக்களை ஏற்படுத்தி தொழிலாளிகளை வஞ்சிக்கின்றனர்.